ஊரடங்கு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக குறைவு

 


ஊரடங்கு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக குறைவு:


தமிழகத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது தேசிய நோய் தடுப்பு மைய தரவுகளின் படி தெரியவந்துள்ளது. லேசான பாதிப்பு உணர்ந்ததும் மருத்துவரை அணுகுதல், கூடுதல் விழிப்புணர்வு, சுத்தத்தை பேணுதல் ஆகிய நடவடிக்கைகளால் டைபாய்டு பாதிப்பு குறைய உதவியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல்  ஆகிய மாவட்டங்களில் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், நிகழாண்டு முன் குறிப்பிட்ட அனைத்து மாவட்டங்களிலும் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. 

Comments